யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரப்பகுதியினை துப்புரவு செய்யும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது .
யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான பொலீஸ் அணியினரால் இன்றையதினம் யாழ்ப்பாண நகர பகுதியானது சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன.
குறித்த வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பகுதியினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்